கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காது கேட்காதது போன்று நடித்த தனது 84 வயது கணவரிடம் இருந்து 80 வயது மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அதிகம் பேசும் சுபாவம் கொண்ட மனைவியை சமாளிப்பதற்காக 62 ஆண்டுகள் காது கேளாதது போன்று கணவர் நடித்தது அம்பலமாகியுள்ளது.

coupledeafdivorce

அமெரிக்காவின் கனடிக்கெட் பகுதியை சேர்ந்த பாரி டவ்சன் மற்றும் டோரத்தி திருமணமாகி சுமார் 62 ஆண்டுகள் வரை ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் 6 பிள்ளைகள் மூலம் 13 பெயரன் மற்றும் பெயர்த்திகள் உள்ளனர். இந்த தம்பதியினர் 62 ஆண்டுகால வாழ்க்கைக்கு பிறகு பிரியும் முடிவை எடுத்ததுள்ளனர். இருவரும் பிரிவதற்கான காரணம் கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

62 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி டோரத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார். 62 ஆண்டுகளாக தனக்கு காது கேட்காது எனக் கூறி ஏமாற்றியதாக டோரத்தி புகாரில் குறிப்பிட்டுள்ளார். காது கேட்காது என தனது மனைவி உள்ளிட்ட அனைவரிடம் பாரி டவ்சன் கூறினார் என்பதை கேட்டால் நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள்…

திருமணத்திற்கு பிறகு தனது மனைவியின் சொல்லை காதிலேயே வாங்கக் கூடாது என முடிவெடுத்த, பாரி டவ்சன் திருமணத்திற்கு முன்பாக தனக்கு காது கேட்காது என தன் மனைவி டோரத்தியிடம் கூறியுள்ளார். அதற்கு டோரத்தி சம்மதம் தெரிவித்து பாரி டவ்சனை திருமணம் செய்துக் கொண்டார். கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் வரை டோரத்தியிடம் திருமண பந்தத்தில் வாழ்ந்து வந்த பாரி டவ்சன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வாழ்ந்துள்ளார். தன் மனைவி ஏதாவது பேசினாலும், தனக்கு கேட்கவில்லை என சைகையுடன் கூறி வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக தனது கணவனின் இயலாமைக்கு தீர்வு தேடிய டோரத்தி, சைகை மொழியை இரண்டு ஆண்டுகள் செலவழித்து கற்றுக் கொண்டார். அதன் மூலம் பேசினால் தனது கணவருக்கு புரியும் என டோரத்தி கனவு கண்டார். ஆனால், அதற்கு பாரி டவ்சன் முற்றுப்புள்ளி வைத்தார். சைகை மொழியை பார்த்து உணரும் ஆற்றல் தனக்கு இல்லை எனவும், தனக்கு பார்வைக் குறைபாடு உள்ளதாகாவும் பாரி டவ்சன் கூறியுள்ளார். அதனையும் டோரத்தி நம்பியுள்ளார். அவர் மட்டுமின்றி, மகன், மகள், பேயரன், பேத்தி என அனைவரும் பாரி டவ்சனுக்கு காதுகேட்காது, கண்பார்வை குறைவு என எண்ணினர்.

இந்நிலையில், வீட்டில் யாராவது இருக்கும் போது காது கேட்காது போல நடித்து வந்த டவ்சன், யு-டியூப் வீடியோவில் இசையைக் கேட்டு அதற்கேற்றவாறு பாடியுள்ளார். இசைக்கு ஏற்றவாறு டவ்சன் பாடிய வீடியோ யு-டியூபில் பதிவேற்றப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த டவ்சனின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 62 வருடங்களாக கேட்காதது போன்று இருந்த ஒருவர் இசைக்கு ஏற்றவாறு பாடியது அவர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன்,இவ்வளவு நாட்கள் அவர் நடித்து வந்தது நிரூபணமானது.

இதனால் மனமுடைந்த டோரத்தி இவ்வளவு நாட்களாக காது கேட்காதது போன்று தன்னை ஏமாற்றிய கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசிய டவ்சன் தரப்பு வழக்கறிஞர், “ இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவர் டவ்சன். மனைவிக்காக மட்டும் தான் அவர் காது கேட்காதது போல் நடித்தார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. அவரது மனைவி டோரத்தி பேச்சை நிறுத்த முடியாது, அவ்வாறு நிறுத்த வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். தன்னையும், தன் திருமண வாழ்க்கையையும் காத்துக் கொள்ள டவ்சன் இவ்வாறு செய்தார்.

தனது குழந்தைகளுக்காக இந்த தியாகத்தை அவர் புரிந்துள்ளார். இதனால் தான் இவர்கள் இருவரும் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை 62 ஆண்டுகள் வரை கழித்துள்ளனர் “ என கூறினார். அதிகம் பேசும் சுபாவம் கொண்ட மனைவியை சமாளிக்க காது கேளாதோர் போன்று 62 ஆண்டுகள் நடித்த டவ்சனின் வாழ்க்கை கதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.