சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துககொண்டிருந்தவர் காளை முட்டியதில் பரிதாபமாக பலியானார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர். அப்போது மாடுகள், பார்வையாளர்கள் பகுதிக்குள் நுழைந்து முட்டியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் சிறுவயல் என்ற பகுதியைச் சேர்ந்த 45 வயது முருகேசன் பலியானார். வேங்கவயலைச் சேர்ந்த 23 வயது முருகேசன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையின் அனுமதி பெறாமல் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.