டெல்லி:

கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பஞ்சாப்பில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு சுமார் 50 வயத மதிக்கத்தக்கத ஆண் பயணி ஒருவர் வந்தார். குவைத் ஏர்வேஸ் விமான நிறுவன கவுன்ட்டருக்கு அருகே வந்தார்.

அங்கு சாதாண உடையில் இருந்த ஒரு பெண் சி.ஐ.எஸ்.எப் காவலரிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் காவலர் என்பதை அறியாமல் செய்கைகள் மூலம் தனது சேஷ்டைகளை தொடங்கினார். இதையடுத்து அந்த பெண் காவலர் அந்த நபரை பிடித்து மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.

பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் குவைத் ஏர்வேஸ் மூலம் நியூயார்க் செல்ல வேண்டியவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

‘‘சந்தேகப்படும் படியான பயணிகளை கண்காணிக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஈடுபடும் பயணிகளை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் காவலர்கள் விமானநிலைய பாதுகாப்பு பணியில் ஈ டுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.