த்தர்பூர்

ன்று நடந்த வாக்குப்பதிவில் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஒருவர் வாக்களித்துள்ளார்.

மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது.    இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மீதமுள்ளன.   பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே  முடிவுகள் வெளி வர உள்ளன.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் தொகுதியும் ஒன்றாகும்.    இந்த தொகுதியில் ஒரு வாக்காளரின் தந்தை இறந்துள்ளார்.   அவருக்கு இன்று காலை இறுதிச் சடங்கு நடந்துள்ளது.

அந்த வாக்காளர் தனது தந்தையின் இறுதிச் சடங்கை விரைவாக முடித்து விட்டு  இன்று தனது வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார்.   இந்த தகவல் டிவிட்டரில் வெளியாகி உள்ளது.  அந்த தகவலை பலரும் பதிந்தததால் அது வைரலாகி வருகிறது.