மான்செஸ்டர்: மீண்டும் துவங்கியுள்ள பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஆர்சனல் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது மான்செஸ்டர் அணி.

தற்போதைய கொரோனா உலகில், ரசிகர்கள் இல்லாமல் பல கால்பந்து தொடர்கள் மீண்டும் துவங்கியுள்ளன. அதேசமயம், மைதானத்தில் பெரிய திரை ஒன்று வைக்கப்பட்டு, அதன்மூலமாக ரசிகர்கள், வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இரு அணிகளின் மாற்று வீரர்கள், மருத்துவக் குழுவினர், பயிற்சியாளர்கள், செய்தியாளர்கள் மட்டுமே மைதானத்தில் இருந்து போட்டியை ரசித்தனர். பெரும்பாலான இருக்கைகள் பேனர் கொண்டு மூடப்பட்டிருந்தன.

மான்செஸ்டர் – ஆர்சனல் அணிகள் மோதிய இப்போட்டியில், 47வது நிமிடம், 51வது நிமிடம் மற்றும் 91வது நிமிடத்தில் கோலடித்த மான்செஸ்டர் அணி, ஆர்சனல் அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது.

ஆஸ்டன்வில்லா – ஷெஃப்பீல்டு யுனைடெட் அணிகள் மோதிய மற்றொரு போட்டி, கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தது.