டில்லி

ர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.

சிக்கிய மத நிறுவனர் குருநானக் தேவி நினைவிடம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.    இங்குள்ள கர்தார்பூர் குருத்துவாராவுக்குச் சீக்கியர்கள் புனிதப் பயணம் செல்வது வழக்கம்.   அதையொட்டி பாகிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஆன்மீகப்பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப்  பணிகள் விரைவில் முடிவடைந்து நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று  திறப்பு விழா நடைபெற உள்ளதாகப் பாகிஸ்தான் அரசு கூறி உள்ளது.  அத்துடன் இந்த  விழாவில் கலந்துக் கொள்ள முன்னாள் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்தார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்னும் முறையிலும் சீக்கியர் என்பதாலும் அவரை அழைக்க உள்ளதாக குரேஷி மேலும் கூறி உள்ளார்.  இது குறித்து மன்மோகன் சிங் அலுவலக அதிகாரிகள் அப்படி ஒரு அழைப்பு வரவில்லை எனவும் வந்தாலும் அந்த அழைப்பு நிராகரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.