வாழ்க்கையில் செல்வ செலிப்புடம் வாழவேண்டும் என்ற என்னம் எல்லோருக்கும் இருக்கும். மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற அல்லது மகான் திருமூலர் கூறியது போல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது  சொல்ல வேண்டும். இதை சாமி படத்திற்கு மல்லிகை பூ போடும் போது கூறவேண்டும்.  இந்த பூ லட்சுமி தேவிக்கு ஏற்ற மலர்.

 

சாமிபடத்திற்கு மல்லிகை பூ வைப்பது லட்சுமி அருள் கிடைக்கும்.  பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு பார்த்துக் கொடுக்க வேண்டும். விநாயகர்  கோபமாக உள்ள கண்திருஷ்டி படத்தை  மாட்டக்கூடாது.

 

மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் வைப்பது நல்லது. ஒருவேலை உங்களிடத்தில் மேற்கூறிய படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. நாள் ஒன்றுக்கு  ஒரு முறையாவது கிழே கொடுத்துள்ள மந்திரத்தைக் கூறவேண்டும். இவ்வாறு தினமும் கூற செல்வம் பெருகும்.

ஓம் அகத்தீசாய நம!

ஓம் கரூவூர்தேவாய நம!

ஓம் போகதேவாய நம!

ஓம் கோரக்கதேவாய நம!

 

தொடர்ந்து அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று சொல்வார்கள்.  இந்த சக்திக்குறைபாட்டை நிவர்த்திசெய்ய  அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில்  ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கிறார்கள். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில்  நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் சொல்ல  நன்மைகள் வந்துசேரும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:

 

ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:

தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

மந்திரங்கள்  சொல்லி வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற்று வாழ்வீர்கள்…..