சென்னை,

சசிகலா அணியில் இருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று,  முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணமும் அதிமுக உடையக்கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. மேலும் பல அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அண்ணன் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு வருவார்கள்.  சசிகலா தரப்பில் நாம் இருந்தால் மக்களை சந்திப்பதற்கு பயந்து செல்லவேண்டும். இங்கே இருந்தால் மக்களை தைரியமாக சந்திக்கலாம்” என்ற தெரிவித்தார்.