சுக்மா:
த்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது  மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர வெடிகுண்டு தாக்குதலில்  நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

வட கிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சத்திஷ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில்  சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் , கஸ்தாமரம் முதல் பாலோடி வரை உள்ள பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மாவோயிஸ்டுகளின் கோப்ரா படையை சேர்ந்தவர்கள், சாலைகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.‘

இன்று காலை 8 மணி அளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான வாகனம் தூக்கி வீசப்பட்டதாகவும், அதில் பயணம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், அதையடுத்து, மாவோயிஸ்டுகளை வேட்டையாட முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.