குருகிராம்:
குருகிராமின் நாதுபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்துக்கு மின்சார கோளாறால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீயணைப்புப் பணியாளர்கள் குடிசைகளில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றினர், மேலும் தீயைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு ஐந்து மணி நேரம் பிடித்தது. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இதுகுறித்து உதவி கோட்ட தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி காஷ்யப் கூறுகையில், சுமார் 15 தீயணைப்பு டெண்டர்கள் அந்த இடத்தை அடைந்து ஐந்து மணி நேரத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தன என்று தெரிவித்தார்.