ஊரடங்கு காரணமாக எட்டு மாதங்கள் தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை.

“தியேட்டர்களின் சகாப்தம் முடிந்து விட்டது” என சினிமா உலகத்தினர் கலங்கிய நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

“பாதி இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அமர வைக்க வேண்டும்” என்ற விதியை பின்பற்றி இந்தப்படம் திரையிடப்பட்டது. அனைத்து தியேட்டர்களும், இந்த படத்தால் லாபம் சம்பாதித்துள்ளன.

தமிழ் சினிமா உலகத்துக்கு மட்டுமல்லாமல், இந்திய சினிமா உலகத்துக்கே மாஸ்டர் படம் நம்பிக்கை ஒளி பாய்ச்சியுள்ளது.

ரிலீஸ் ஆன 6 நாட்களில் மாஸ்டர் திரைப்படம் இந்தியாவில் 130 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 20 கோடி ரூபாயும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

– பா. பாரதி