ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வைரல் ஆகி வரும் தகவல் என்னவெனில் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்றும், நெட்பிலிக்ஸ் நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக பல செய்திகள் படத்தின் ரிலீஸ் குறித்து பரவி வருகின்றன.இது குறித்து விளக்கம் அளிக்கவே தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.மாஸ்டர் படத்தினை நேரடியாக வெளியிட OTT தளத்தில் இருந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது,இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதே நமது தமிழ் திரையுலகுக்கு நல்லது என்று முடிவெடுத்துள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.