க்னோ

குஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி பா ஜ க தனது தலித் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்தால் தான் புத்தமதத்துக்கு மாறுவேன் என எச்சரித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று அசாம்கர் பகுதியில் நடந்த ஒரு பேரணியில் கலந்துக் கொண்டார்.  இந்த தொகுதி சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலயம் சிங் யாதவின் தொகுதி ஆகும்.   இந்த பேரணியில் மாயாவதி உரையாற்றினார்.

மாயாவதி தனது உரையில், “நமது கட்சி கன்ஷிராமால் துவங்கப்பட்டது.  இது முழுக்க முழுக்க இந்து மதத்தின் வகுப்பு வாதப் பிரிவினையால் துயரப்பட்ட தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக துவங்கப் பட்டது.  இந்தக் கட்சி பாபா சாகிப் அம்பேத்கார் வழியில் ஒடுக்கப்பட்டோரின் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, மற்று அரசியல் முன்னேற்றத்துக்காகவே பாடுபடுகிறது.

தற்போது பா ஜ க முதல்வரான யோகி ஆதித்யநாத் தனது கூட்டாளியான ஆர் எஸ் எஸ் உடன் சேர்ந்து தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மதம் மாறியவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.  எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பை காட்டுகிறார்.  இந்த நிலையை அவர் தொடர்ந்தால், நான் எனது கோடிக்கணக்கான தொண்டர்களுடன் புத்தமதத்தை தழுவுவேன்.

யோகி ஆதித்யநாத் கட்டப்போகும் ராமர் கோயிலோ, அல்லது வேறெந்த கோயிலோ ஏழை மக்களுக்கு எந்த நலனும் அளிக்காது.   எழ்மை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்றும் தொடரும்.   யோகி தனது சொந்தத் தொகுதியையே கவனிக்காதவர்.   அறிக்கை விட மட்டுமே அவருக்குத் தெரியும்” என கூறினார்.