லக்னோ:

வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியை கங்கை தண்டிக்கும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில், மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தேர்தல் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மாயாவதி, கங்கையை சுத்தம் செய்வேன் என்று அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

மோடியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்து கங்கை அவரை தண்டிக்கும். பல கோடி செலவு செய்தபின்னும் கங்கை இன்னும் சுத்தமாகவில்லை.
விசுவநாத் ஆலய விரிவாக்கத்துக்கு அருகில் உள்ள கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இதனால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

பேரணியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியிலிருந்து வெற்றி பெற்றுச் சென்ற பிரதமர் மோடி, தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.

வாரணாசி தொகுதி வளர்ச்சியடையவில்லை. கங்கையை சுத்தம் செய்வது அவர்களது எண்ணம் இல்லை என்றார்.