சென்னை: வெளிநாடுவாழ் மாணவர்களுக்காக நாளை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இது தவிர 15 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.

18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

இந் நிலையில், வெளிநாடுவாழ் மாணவர்களுக்காக நாளை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. நாளைக்கு பதிலாக வரும் 18ம் தேதி இந்த கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.