சென்னை

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ம தி மு க தனது ஆதரவை திமுகவுக்கு அளிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.  தி முகவுக்கு ஆதரவு கோரி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.  கோவை விமான நிலையத்தில் வைகோ – ஸ்டாலின் சந்திப்பு நடந்தது.   இது சாதாரண சந்திப்பு எனச் சொல்லப்பட்டாலும் அதை யாரும் ஒப்புக் கொளவில்லை.  இன்று காலை மதிமுக தலைமையகத்தில் வைகோ தலைமையில் ஆர் கே நகர் தேர்தல் நிலைப்பாடு பற்றி உயர்நிலைக் குழுக்கூட்டம் கூடி விவாதிக்கப்பட்டது.  கூட்டம் முடிந்ததும் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்

அப்போது அவர், “ஆர் கே நகர் இடைத் தேர்தலில் மதிமுக தனது ஆதரவை திமுக வேட்பாளருக்கு அளித்துள்ளது.  மத்திய பா ஜ க அரசுக்கு பாடம் புகட்டவும்,  தமிழ்நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.   மேலும் இந்தச் சந்திப்பில் பாஜக மற்றும் அதிமுக மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை வைகோ கூறி உள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.