நெல்லை:

திமுக திருநெல்வேலி மாவட்டச்செயலாளர் டி.ஏ.கே.லக்குமணன் வயது முதிர்வு காரணமாக மறு காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் திமுக வட்டக்கழகச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கி டி.ஏ.கே. லக்குமணன்,  பின்னர், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர்.

வைகோவுடன் டிஏகே லக்குமணன்

1993-ம் ஆண்டு, கலைஞர் கருணாநிதியுடன் வைகோவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, வைகோ திமுகவை விட்டு விலகியபோது, அவருடன் பிரிந்து சென்ற  9 மாவட்டச் செயலாளர்களில் டிஏகே லக்குமணனும் ஒருவர்.

பின்னர் சில விசயங்களில் வைகோவிடம் மனக்கசப்பு ஏற்பட்டு, அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால், அங்கும் ஒத்துவராத நிலையில், மீண்டும் மதிமுக.வுக்கு திரும்பினார்.

இதையடுத்து மதிமுகவின்  அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது, வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த   டிஏகே லக்குமணன் இன்று (ஜூன் 6) மதியம் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்து உள்ளார்.