சென்னை:
திருச்சியில் இருந்த சிங்கப்பூர் சென்ற தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர மாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.
170 பயணிகளுடன் இன்று காலை திருச்சியில் இருந்து சிங்கபூரை நோக்கி புறப்பட்ட ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திர பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதையடுத்து விமானம் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கும் வேளையில் அங்கு தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு வண்டிகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரை யிறக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மாலை அந்த விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.