புதுடெல்லி: கொரோனா வைரஸ் களேபரம் காரணமாக, இந்தியக் கடற்படைக்கான மருத்துவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல் படைக்கான இறுதி மருத்துவத் தேர்வு ஐஎன்எஸ் சில்காவில் வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவிருந்தது. தற்போது அத்தேர்வு, மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடக்கும் தேதி விபரம் கடலோரக் காவல் படையின் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தளத்திற்கு தேர்வர்கள் அவ்வப்போது சென்று பார்த்து, தேர்வு தேதிக்கு ஏற்ற வகையில் தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பள்ளிக்கல்விதுறை மூலமாக 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல் பாடங்களை தேர்வு செய்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கு சிறப்பு பிரிவின்கீழ் மதிப்பெண்ணில் 5% தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த 5% தளர்வு, இந்தியக் கடலோர காவல்படை ஊழியர்களுக்கும் பொருந்தும்.

காலியிடங்கள், பதவிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு இந்தியக் கடலோர காவல் படையின் இணையதளத்தில் காணலாம்.