மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் நடித்தவர் எஸ்தர். தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருக்கிறார் இவருக்கும் தெலுங்கு நடிகரும் பாட கருமான நோயல் ஷேனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். ஆனால் 6 மாதத்திலே யே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் இருவரும் விவா கரத்து செய்து பிரிய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு செய்தனர். சட்டப்படி தற்போது இருவரும் பிரிந்தனர்.


விவாகரத்து பெற்று பிரிந்தது பற்றி நடிகை எஸ்தர், ‘நானும் நோயாலும் கடந்த ஆண்டு ஜனவரி திருமணம் செய்தோம். சில நாட்களில் எங்களுக் குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. இருவரும் சட்டப்படி பிரிவது என முடிவு செய்தோம். அதன்படி அதே ஆண்டு ஜூன் மாதம் கோர்ட்டில் விவாகர த்துக்கு விண்ணப்பம் செய் தோம். தற்போது எங்களுக்கு விவா கரத்து கிடைத்திருக்கிறது’ என தெரிவித்தார்.
‘ நீண்ட நாட்களாக நான் அமைதியாக வே இருந்து வந்தேன் தற்போது இதனை‌ அறிவிக்கிறேன். எங்கள் இரு வருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம். கோர்ட் முடிவுகளுக்கு பிறகு அறிவிப்பது தான்‌ முறை. என்ப தால் இப்போது இதை தெரிவிக் கிறேன் ‘ என நோயல் தெரிவித்திருக்கிறார்.