ஷில்லாங்:

மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் திடீர் ராஜினாமாசெய்துள்ளனர்.

மேகாலயா மாநிலத்தில் முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர், ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இரு சுயேச்சைகள் என மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 4 பேரும் முன்பு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள். அவர்களை முதல்வர் சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார்.

ராஜினாமா செய்த அவைரும் பாஜக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியில் சேர போவாதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் அரசின் பலம் 33 ஆக இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபையின் பதவி காலம் மார்ச் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.