ஷில்லாங்

மேகாலயா முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.  உலக அளவில் கொரோனா பரவலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 98.27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.42 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

பல அரசியல் மற்றும் கலைப் பிரபலங்களும் கொரோனாவால்  பாதிப்பு அடைந்துள்ளனர்.   அவ்வகையில் தற்போது மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தனது டிவிட்டரில் பதிந்த சங்மா தனக்குப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டுத் தனிமையில் உள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.