ஸ்ரீநகர்:

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் ஆகஸ்டு 5ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,  மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு  5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, ஆகஸ்டு 4ந்தேதி  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வரு மான உமர் அப்துல்லா உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்ட நிலையில்,  வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும்2020ம் ஆண்டு  மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஆனால்,  மெகபூபா முப்தி தொடர்ந்து வீட்டுக்காவலிலேயே இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொது பாதுகாப்புச் சட்டம் வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதியுடன் முடிடைய இருப்பதாவல், அவரது வீட்டுக்  காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.