பிரபல தனியார் டி.வியில் இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் திருநங்கை ரோஸ் வெங்கடேசன்.

 

அமெரிக்காவில் பொறியியல் உயர் படிப்பு படித்துத்திரும்பிய இவர், ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி மற்றும் எஃப். எம். ரேடியோவில் பணியாற்றியனார். தற்போது திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக சில பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

முகநூலில் தீவிரமாக இயங்கும் இவர், இன்று, “கொஞ்சநாள் செக்ஸ் ஆசைக்காக ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பின்னூட்டமாக, “யார் கிட்டயாச்சும் ஏமாந்தாச்சா”, “ (செக்ஸ்) கொஞ்ச நாளா.. கொஞ்ச நேரமா..”, “உங்களைப் போய் யார் ஏமாறச் சொன்னாங்க..

வாய் கிழிய பேசத் தெரியுது” என்றெல்லாம் கிண்டலடித்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். திருநங்கைகள் என்பவர்கள் முழுமையாக பெண்ணுக்குரிய உணர்வுகளோடு இருப்பவர்கள்.

அவர்களை கிண்டலடிக்கும் விதமாக நெட்டிசன்கள் பின்னூட்டமிட்டு மனதை வருத்தப்பட வைக்கிறார்களே என்று தோன்றுகிறது. இதனால்தானோ என்னவோ, திருநங்கை ரோஸ், “திமிராகப் பேசும்/ இருக்கும் ஆண்களுக்கு அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் (என்ற எண்ணம் வேண்டும்)” என்று பின்னூட்டம் இட்டிருக்கறார்.