துபாய்::

சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விஜய் மற்றும் அந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தும், வெளியான பிறகும் திரைப்பட குழுவினருக்கு பெரும் மன உலைச்சளை ஏற்படுத்தியது.

இதனால் விஜய், சென்னையில் படக்குழுவினருடன் மெர்சல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார். அடுத்தகட்டமாக ஓய்வு எடுக்க விஜய் துபாய் சென்றுள்ளார். அவருடன் இயக்குனர் அட்லீயும் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.