விளையாட்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள், இந்தியா மட்டுமல்ல, உலகம் எங்கிலுமே ரட்சகர்களாகவும், ஏன் கடவுளாகவுமே மதிக்கப்படுகிறார்கள்.
வெறித்தனமான ரசிகர்கள் பலர், தங்களின் அபிமான வீரர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை மறந்து விடுகிறார்கள்!
தற்போது நடைபெற்று முடிந்துள்ள ‘லா லிகா’ கால்பந்து தொடரில், ஹாட்ரிக் முறையில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா கிளப் அணி, ரியல் மேட்ரிட் அணியிடம் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்து விட்டது. பார்சிலோனாவுக்கு இரண்டாமிடமே கிடைத்தது.
இந்த விஷயத்தில், மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளனாவர் அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிதான். பார்சிலோனா அணியை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இப்படி விமர்சிப்பது இது முதல்முறையல்ல.
மெஸ்ஸியை கடவுளாக பார்க்கும் அவரின் வெறித்தனமான ரசிகர்களுக்கு, மெஸ்ஸியிடமிருந்து பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மனிதர் என்ற முறையில், பார்சிலோனா அணியின் தோல்வி, மெஸ்ஸியை கடுமையாக பாதித்துள்ளது!