மதுரை:

“இயற்கை வளங்களை பாழாக்கும் மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் மு.க. ஸ்டாலின்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட் களம் வந்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “இயற்கை வளங்களை பாழாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தையெழுத்திட்டு துரோகம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசும் தொடர்ச்சியாக தமிழக்துதக்கு துரோகம் செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.