சென்னை:

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இதற்கான  தொடக்க விழா வரும் 25ந்தேதி நடைபெற உளளது.

ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்த நேரு பூங்கா வரை நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சேவை தற்போது சென்ட்ரல் வரை நீடிக்கப்பட உள்ளது.

மேலும், சின்னமலை – டிஎம்ஸ் ஆகிய புதிய வழித்தடங்களிலும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மெட்ரோ ரெயில் சேவை  தொடங்கப்பட உள்ளது.

சென்னையில்  மெட்ரோ ரெயில் சேவை தற்போது விமான நிலையம் – சின்னமலை மற்றும் பரங்கிமலை – நேருபூங்கா ஆகிய வழித்தடங்களில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேருபூங்கா – சென்டிரல், சின்னமலை – டிஎம்ஸ் ஆகிய வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வழித்தடத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில் சேவை தொடங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரெயில் சேவையை தொடங்கி வைக்கின்றனர்.

இதன் காரணமாக கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.