சென்னை

குடிநீர் வாரியம் சென்னை மக்களுக்கான குறை தீர்க்கும்கூட்டத்தை வரும் 13ஆம் தேதி அன்று மண்டல அலுவலகங்களில் நடத்த  உள்ளது.

சென்னை குடி நீர் வாரியம் திறந்த வெளி குறை தீர்க்கும் கூட்டம் வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று மண்டல அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என வாரியம் அறிவித்துள்ளது.    இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கட்டணங்கள்,  புதிய இணைப்புகள் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம் என வாரியம் கூறி உள்ளது.

குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் அலுவலகங்கள் :

பகுதி அலுவலகம் 1 – திருவொற்றியூர்

பகுதி அலுவலகம் 2 – மணலி

பகுதி அலுவலகம் 3 – மாதவரம்

பகுதி அலுவலகம் 4 – தண்டையார்பேட்டை

பகுதி அலுவலகம் 5 – ராயபுரம்

பகுதி அலுவலகம் 6 – திரு.வி.க.நகர்

பகுதி அலுவலகம் 7 – அம்பத்தூர்

பகுதி அலுவலகம் 8 – அண்ணா நகர்

பகுதி அலுவலகம் 9 – தேனாம்பேட்டை

பகுதி அலுவலகம் 10 – கோடம்பாக்கம்

பகுதி அலுவலகம் 11 – வளசரவாக்கம்

பகுதி அலுவலகம் 12 – ஆலந்தூர்

பகுதி அலுவலகம் 13 – அடையாறு

பகுதி அலுவலகம் 14 – பெருங்குடி

பகுதி அலுவலகம் 15 – சோழிங்கநல்லூர்

 

தவிர மழைநீர் சேகரிப்பு தொடர்பான விளக்கங்களும் இந்த கூட்டத்தில் அளிக்கப்படும் என வாரியம் கூறி உள்ளது..