மேட்டூர்: நடப்பாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை , சமீபத்தில் நிவர் புயலால் டெல்டா மாவட்டங்களில் கனமழை  காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணை இந்த ஆண்டில் (2020) 4வது முறையாக இன்று மதியம் 100அடியை எட்டி உள்ளது. நேற்று 99 அடியை  கடந்த நிலையில், இன்று 100அடியாக உயர்ந்துள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,111 கன அடி வீதமாக உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 750 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணை ஏற்கனவே கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 முறை   100 அடியை எட்டியயது குறிப்பிடத்தக்கது.