மேட்டூர்:

டப்பு ஆண்டில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியில் கடந்த 25 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், தமிழகத்தில் பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணை நடப்பு ஆண்டில்  தனது முழு கொள்ளவை எட்டி உள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் நடப்பு ஆண்டி ஏற்கனவே 4முறை முழு கொள்ளவை எட்டிய நிலையில், தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.  நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.