சென்னை:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து 17ம் தேதி செவ்வாய் கிழமையும் விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.