நேற்று இரவு நடைபெற்ற  ஐபிஎல் 14-வது லீக் போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின்போது டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிபந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  இதன் காரணமாக முப்பை இந்தியன் அணியினர் மட்டையுடன் களமிறங்கினர்.

மும்பை அணியினர் நிதானமாக விளையாடி,   நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது.

பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளும் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய பெங்களூரு அணி பின்னர் விறுவிறுப்பாக விளையாட தொடங்கியது. இருந்தாலும் அவர்களால்  முப்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.

இதன்காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மும்பை அணியின்  குர்னல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் மெக்கினெக்கான் தலா 2 விக்கெட்டுகளும், மார்கண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.  இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தற்போது நடப்பு சாம்பியனாக உள்ள மும்பை இந்தியன்ஸ்  அணி இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் தோலவியை சந்தித்த நிலையில், நேற்று பெங்களூரு அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்து  முன்னேறி உள்ளது.

மும்பை இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 94 ரன்களும், யுமேஷ் யாதவ் 36 ரன்னில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர். விராட் கோலி 92 ரன்கள் எடுத்த நிலையலும் பெங்களூரு தோல்வியை சந்தித்தது.