சீனாவின் நாங்டாங் விமான நிலையத்தில் இருந்து ஜியாங் சென்று கொண்டிருந்த டொங்ஹாய் ஏர்லைன்ஸ் சென்று கொண்டிருந்த விமானத்தின் பைலட்டிற்கும் விமான சிப்பந்திக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அவர்களின் வேலைக்கு உலைவைத்திருக்கிறது.

முதல் வகுப்பு பகுதியில் உள்ள கழிவறையில் ஆண் விமானி இருந்த நேரத்தில், கழிவறைக்கு வெளியே இருந்து பயணி ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

உங்கள் இருக்கையில் சென்று அமருங்கள் நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று விமானி கூறியதை பொருட்படுத்தாமல் அந்த பயணி அங்கேயே காத்திருந்தார்.

வெளியில் வந்து பார்த்த விமானிக்கு அதிர்ச்சியாக இருந்தது, உடனடியாக விமான சிப்பந்தியை அழைத்து ஏன் அவரை அவர் இருக்கையில் அமரவைக்கவில்லை, இது பாதுகாப்பு குறைபாடான செயல் என்று பொரிந்து தள்ளினார்.

பதிலுக்கு அந்த ஆண் சிப்பந்தியும் சில வார்த்தைகளை கூற, வார்த்தை முற்றி கைகலப்பானது, இந்த கைகலப்பில் விமானியின் பல் காணாமல் போக, சிப்பந்தியின் கை முறிந்தது.

கடந்த ஞாயிற்று கிழமை நடந்த இந்த சம்பவத்திற்கு பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்த இருவரையும், சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பியது அந்த விமான நிறுவனம்.