கால்நடையாக செல்லும் சிலர் ஊருக்கு அருகிலேயே மயங்கி விழுந்து உயிரிழக்கும் கோர நிகழ்வுகளும், ஏராளமானோர் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், அந்த பெண் உணவின்றி பசியால் தவித்து வந்த நிலையில், ரயில் முசாபர்பூரை நெருங்கும்போது பரிதாபகமாக உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அவரது உடல் அங்குள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டு, போர்வையால் மூடப்பட்டது. அந்த பெண்ணைச் சுற்றி அவரது 2 குழந்தைகளும் நின்று கொண்டிருந்தன.
அப்போது, சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க அவரது குழந்தை, பிஞ்சு குழந்தை, தாய் இறந்தது தெரியாமல், அவரை மூடியிருந்த போர்வையைத் தூக்கி தன்மீது போர்த்தியும், அந்த தாயை எழுப்பவும் முயற்சிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது…
இதை பார்ப்பவர்களின் கண்ணில் ரத்தக்கண்ணீர் வருகிறது…
Video Credit: Valley Online