ஸ்ரீநகர்,

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்ரகரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமர்த்நாத் யாத்ரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை துரிதபடுத்தப்பட்டது.

அமர்நாத் செல்லும் வழியிலும் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி  வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த அதிரடி தாக்குதலில் 3 பேர்  பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.