சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுவதும் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன. சட்டமசோதாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் கட்சிகளில் இடையே கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,  இலங்கைத் தமிழர்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறது  என்றும், திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.  இலங்கை தமிழர்களை ஏமாற்ற திமுக போடும் நாடகத்தை மக்கள் பரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும்,  உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற நேரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வீணடிக்கிறார் என்றும் கூறினார்.