ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அபோது செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன ஜோக்கர் என்று கூறியிருக்கிறார். ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிதம்பரத்துக்கு பயமில்லை என்றால் விசாரணைக்கு அவர் ஒத்துழைத்திருக்க வேண்டியதுதானே ? சிபிஐ அதிகாரிகளை சுவர் ஏறிக் குதித்து, கைது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியதே அவர் தான்.

தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி வருவதாக தகவல்கள் வெளியாவது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.ஸ்கார்ட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது . தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.