சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் இன்று சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மேலும், தமிழக தலைமை செயலாளர், காவல்தறை டிஜிபி போன்றோரும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று பகல் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி நியமனங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வரும், துணைமுதல்வரும் சென்னையில் உள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கவர்னரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.