டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றொரு அமைச்சர் தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். இந் நிலையில் இன்று மத்திய விவசாய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகி உள்ளது.

3 நாட்களுக்கு முன் தனது தொகுதியில் மக்கள் குறை கேட்க தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:

கொரோனா அறிகுறி இருப்பதால் தற்போது தனிமைப்படுத்திக்கொண்டேன். இன்று ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளேன்; என்னுடன் தொடர்பிலிருந்த நண்பர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் குடும்பத்திலிருந்து விலகி தங்களை தாங்களே தனிமைபடுத்திக்கொள்ளுங்கள் என்றார்.