சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருகிறார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களிடையே விழப்புணர்வை ஏற்படுத்தவே தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் . நேற்று இரவு மருத்துவமனையில் தான் இருந்தேன். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று கூறினார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொற்று உறுதியானது.  இதையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், து கடந்த 19 ஆம் தேதி  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.