சென்னை: கொரோனா தொற்றால் தீவிர சிகிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமைச்சர் காமராஜ், கடந்த 7ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.  இணை நோய்களும் அவருக்கு இருந்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனாலும் மூச்சுத்திணறல் அதிகரித்ததால் எக்மோ கருவி பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்றிரவு அமைச்சர் காமராஜ் ஆம்புலன்ஸ் வேன் மூலம் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நுரையீரலில் அதிக சளி பாதிப்பு காரணமாக அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். முன்னதாக நேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் மருத்துவமனை அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.