சென்னை:  தமிழக மூத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல்நலக்குறைவால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது அதிமுகவினரிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கைத்தறித்துறை அமைச்சராக இருந்து வருபவர். ஓ.எஸ்.மணியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு  கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி நெஞ்சுவலி காரணமாக,  சென்னை அப்பல்லோ மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.