டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:

இன்று எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசி 2, 3 நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.