டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான மருந்துகளை எடுத்து வருகிறேன்.

கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.