சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில்  பள்ளிகள், கல்லூரிகள்  மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது  திறப்பது என்பது  குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை  தலைமைச் செயலகத்தில் நடைபெறும்  ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பள்ளிகளை எப்போது திறப்பது, பாடங்களை குறைப்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாமா அல்லது கிரேடு வழங்குவதா, நீட் பயிற்சி உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது