சென்னை:

மிழக கல்வி வளர்ச்சிக்கு தேவையான புதிய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள பின்லாந்து சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பியானா வாசித்து அசத்தினார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்ற நிலையில், அவரைத் தொடர்ந்து தமிக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுடன்  பின்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடநத சில நாட்களாக பின்லாந்தில் முகாமிட்டுள்ள செங்கோட்டையன், அங்கு கல்வியில் புகழ்பெற்று விளங்கும் பாடசாலைகளுக்கு சென்று ஆராய்ந்து வருகிறதார். கல்விக்கு பெயர் போன  பின்லாந்தில், அந்நாட்டு கற்றல், கற்பித்தல் முறைகள் உள்ளிட்டவை குறித்து நேரில் கேட்டறிந்து வருகிறார்.

இந்த நிலையில், பின்லாந்தில் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன், அங்கு பியானோ வாசிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.