சென்னை,

சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர்! வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலை மீண்டும் ஆஜராகிறார்.

இன்று காலை டில்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜயபாஸ்கருக்கு, வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதில் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு மேல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குட்கா பேர ஊழல் மற்றும் கிரானைட் ஊழல் தொடர்பாக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்  கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே மூன்று முறை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில்,  தற்போது அமைச்சருக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பி வருமான வரிதுறை குடைச்சல் கொடுத்து வருவது குறிப்பிட்டத்தக்கது.