சென்னை: தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்து, புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக சென்னை, கடலூர் உள்பட சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், புயலின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மழை தொடர்ந்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுளள தமிழக அரசு, அமைச்சரவைகளையும் நியமிதுது உள்ளது. அதன்படி,

சென்னை மாவட்டத்துக்கு,  அமைச்சர்கள்  ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கடலூர் மாவட்டம் – அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத்

திருவாரூர் மாவட்டம் – அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ்

நாகை மாவட்டம்  – எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்

செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டங்கள் – செங்கோட்டையன், பெஞ்சமின்

ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.