யக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும் படம், “சவரக்கத்தி”.  இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார் இயக்குநர் ராம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஆத்மார்த்தமாக மிக வெளிப்படையாக பேசினார்.

அவர், பேசியதாவது:

“எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று நினைப்பார்கள். சிலர் வெளிப்படையாகவும் கேட்பார்கள்.

அவர் உண்மையாகவே  அனைத்து புத்தகங்களையும்  வாசிப்பவர்.

ராம் – மிஷ்கின்

அவரது வாசிப்பு முறை வித்தியாசமானது.  அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார்.

என்னுடைய படத்திலும் சரி, மிஷ்கினின் படத்திலும் சரி.. நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் வித்தியாசம்… டார்க் காமெடி இருக்கிறது.

என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச் சிறந்த கதை இந்த சவரக்கத்தி  கதைன். இதில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது…” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அடுத்து அவர் வெளிப்டையாக சொன்ன ஒரு விசயம் அனைவரையும் கவரந்தது:

“இந்த உலகில் குடிக்க, அன்பை பற்றி பேச,  படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம்தான்.

வித்தியாசமான.. வெளிப்படையான மனிதர்தான் ராம்!